வெளிநாடுகளில் இருந்து மிஸ்டுகால்: வோடபோன் எச்சரிக்கை
சென்னை, ஜன.5: வெளிநாடுகளில் இருந்து மிஸ்டுகால் வந்தால் கவனமாக இருக்குமாறு வோடபோன் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வோடபோனின் உத்தர பிரதேச வாடிக்கையாளர்களுக்கு நேற்று முன்தினம் ஐஎஸ்டி எண்களில் இருந்து மிஸ்டு கால்கள் வந்துள்ளன. சென்னை வாடிக்கையாளர்களுக்கும் இதுபோல மிஸ்டுகால்கள் வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஐஎஸ்டி எண்ணில் இருந்து மிஸ்டு கால் வந்தால், அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டாம். அவ்வாறு தொடர்பு கொண்டால் அதிக கட்டணம் பிடிக்கப்படும். மாறாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
+2245500118
+2245520098
+2245520091
+2245510436
இதுபோன்று +22 என்று வரக்கூடிய தவறிய அழைப்புகளை (மிஸ்டுகால்) எடுக்க வேண்டாம், மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று வோடபோன் எச்சரிக்கை விடுத்துள்ளது
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக