நாயகக் காதலர் தினம்
மனிதர்களது வாழ்வில் சில நாட்கள் மறக்க முடியாத
நாட்களாக மாறிவிடுகின்றன. அந்த நாள் வரும்போதெல்லாம் அந்த நாளில் ஏற்பட்ட
]
நிகழ்வுகள் மனதில் அலை அலையாக அசைகின்றன அந்த நாள் அவர்களது வாழ்வில்
மகிழ்சியை- வசந்தத்தைக் கொன்டு வந்த நாளாக இருந்தால்,அந்த நாளில் அனுபவித்த
அந்த மகிழ்சி அடுத்து வரும் ஆன்டுகளின் அந்த நாளின் போது அதே மகிழ்சியின்
அனுபவம் கிடைக்கிறது தனக்கு திருமணம் நடந்த நாள்! வியாபாரம் தொடங்கிய நாள்-
தனக்கென ஒரு வீடு வாங்கிய நாள்- நோயிலிருந்து மீண்ட நாள் விபத்திலிருந்து
காப்பாற்ற நாள்- இப்படி மகிழ்ச்சிக்குரிய நாள் மீண்டும் வரும்போதெல்லாம்
அந்தமகிழ்ச்சியை மீன்டும் நினைத்து பார்க்க தோன்றுகிறது அப்படிப் பார்த்தால் இந்த
உலகம் மீன்டும் மீன்டும் நினைத்து நினைத்து எண்ணி எண்ணி மகிழ்சி கொள்ள
வேன்டியஒரு நாள் அண்ணல் நபிகள்- ஆருயிர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் பிறந்த பொன்னாள் தான் ரபிவுல் அவ்வல் பன்னிரண்டாம்
நாளாகிய திங்கட்கிழமை தான் அதை போன்ற சிறப்புக்குரிய இன்னொரு நாள் உலகில்
என்றுமே தோன்றப்போவதில்லை அந்த ஒரு நாள்- திரு நாள்- பெரு நாள்- தனி நாள்
இந்த நாள் வரும்போதெல்லாம் நாயகக் காதலர்கள் மெளலீது எனும் தங்கள் காதலரின்
புகழ் மாலைகளைப் பாடிப் பறக்கும் புல் புல் பறவைகளாக மாறிப் போகின்றனர் ஆம்
இந்த நாளை இந்த காதலர்கள்- ஆஷிக்கீன்கள் கொன்டாடி மகிழட்டும் ஏனென்றால்
ரபிவுல் அவ்வல் 12 ஆம் நாள் '' நாயகக் காதலர் தினம்'' அல்லவா? ( நன்றி எல் ஐ டி தமிழ்
இஸ்லாமிய மாத இதழ்) வெளியீடு தமிழ் இஸ்லாமிய இளைஞர் விழிப்புணர்வு
மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக